பிரிய பிராமணச் சொந்தங்களே!
இவ்விதழில் நாம் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துகள் நாம் அறிந்த பிராமண இளைஞர்களது அனுபவங்களின் உரைக் கல்லாக விளங்குகிறது. பிராமண எழுச்சியை மேம்படுத்தும் விதமாகப் புனே நகரில் நடந்த அகில உலக சித்பவன் பிராமண அகில உலக மாநாட்டைப் பற்றிய ஒரு தொகுப்பும் கும்பகோணம் அருகிலுள்ள தேம்பெருமாநல்லூர் பாரதி விழா பற்றிய குறிப்பும் இவ்விதழ் முதல் தொடங்கப்படும் புதிய பகுதியான நிகழ்வுகளில் வெளியிடப்படுகிறது.
பிராமணர்களும் விவசாயமும்
சமீபகாலமாகப் பத்திரிகைகளிலும் பொருளாதார மையங்களிலும் விவாதிக்கப்படும் விவசாய விஷயங்கள் நம் சமூக மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. பத்திரிகையின் விளையாட்டுப் பகுதியை ஒரு வரிகூட விட்டு வைக்காமல் படிக்கும் பிராமணப் பெருமக்கள் அவற்றில் ஈடுபட்டுத் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லர். லாரா அடித்த சதங்களையும் டோனி பிடித்த கேட்சுகளையும் மிகத் துல்லியமாக எந்த நேரத்திலும் எடுத்துச் சொல்லும் நம்மவர்களுக்கு விவசாயத்தின் சில புதிய சாதனைகளையும் சோதனைகளையும் பற்றிச் சிறிதளவும் தெரியாமல் இருப்பது நாம் காணும் யதார்த்தம்.
Brahmins and Agriculture
Yogesh {name changed} took the extreme step of leaving Mumbai for good and decided to come and settle in a remote corner of south Tamil- Nadu to do Agricultural Farming. Apart from the special reasons and circumstances which forced him to take care of the large and unattended farm land his relatives owned, his great urge to try and succeed in a field where the records of Brahmins are dismal to put it mildly, was the main reason.
நிகழ்வுகள்: புனே நகரில் பிராமண எழுச்சி
தொடக்க காலம் முதலே வரலாற்று நாயகர்களாக வாழ்ந்துவரும் மராட்டிய பிராமணர்கள் பிராமண சமூகத்தின் முன்னோடியாகவும் ஒரு முக்கிய அங்கமாகவும் திகழ்கிறார்கள். மராட்டிய பிராமணர்களின் ஒரு முக்கியப் பிரிவாக விளங்கும் சித்பவன் பிராமணர்களின் முதல் அகில உலக மகாநாடு நாம் அனைவரும் தெரிந்து மகிழ்ச்சி அடையும் ஓர் இனிய நிகழ்வாக புனே நகரில் நடந்தேறியது.
பிராமணர்களும் கர்நாடக சங்கீதமும்
கர்நாடகம் என்றால் தெலுங்கில் பிராசீனமான அல்லது புராதனமானது என்று பொருள் கொள்ளலாம். எனவே இது புராதனமான சங்கீதம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவற்றில் வடநாட்டுச் சங்கீதம் தென்னாட்டுச் சங்கீதம் என்று இருபிரிவுகள் தோன்றின.
சித்தம் தெளிய மருந்தொன்று
'வித்யை, வீரம், வாணிபம், விவசாயம் யாவுமே சமூகத்திற்கு அவசியமான தொழில்கள். இவற்றில் உயர்வு, தாழ்வு கிடையாது. இவற்றில் எந்தத் தொழிலை யார் தேர்ந்தெடுப்பது என்கிற பிரச்சினையும் போட்டியும் ஏற்படாமலிருக்கவே பிறப்பினாலேயே என்கிற பிரச்சினையும் போட்டியும் ஏற்படாமலிருக்கவே பிறப்பினாலேயே இன்னாருக்கு இன்ன தொழில் என்று சமூகத்தையே பல பிரிவுகளாக நமது மதத்தில் பிரித்தனர்.
ஸ்ரீ கதிர்காம ஸ்வாமிகள் சரித்திரம்
நாயன்மார்களிடம் ஈடுபாடு: நாயன்மார்களைப் பற்றியும், சித்தர்களைப் பற்றியும் அடிக்கடி பக்தர்களிடம் கூற அவர்களிடம் பக்தி வைக்கத் தூண்டுவார். நாயன்மார்களுக்காக அந்தந்தத் திருநக்ஷத்திரத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். அது இன்று நடந்துவருகிறது.
சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்
ஜெயந்தி வந்துவிட்டுப் போன ரொம்ப நேரம்வரை சியாமளாவுக்கு ஒரு வேலையும் ஓட வில்லை. ஊர் விட்டு ஊர் வந்து ரொம்ப நாளைக்கு அப்புறம் தோழியைச் சந்தித்த சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும் அவள் சொன்ன ஆத்து விஷயம் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஜெயந்தி சாதாரணமாக அந்த விஷயத்தைச் சொன்னாலும் சியாமளாவால் அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை.
ஸ்ரீமத் பாகவதம்
ஸ்ரீமன் நாராயணனால் ஆசீர்வதிக்கப்பட்ட துருவன், தனது அரண்மனைக்கு வந்து பெற்றோர்களை வணங்கி ஆசி பெற்றார். சிலகாலம் சென்ற பின் தகுந்த மனைவியைக் கைப்பிடித்து உத்கலன் முதலிய சிறந்த மக்களைப் பெற்று தன் தகப்பனாருக்குப் பிறகு இராஜ்யத்தை நல்ல முறையில் அரசாண்டு வந்தார்.
பாரதி பக்கம்
உலக மகா காவியங்கள் எனப் போற்றப்படும் ராமாயண, மஹாபாரத காப்பியங்களின் சிறப்பு அவற்றில் காணப்படும் கதைப் பொருளிலும் காவிய நாயகர்களின் பெருமைகளில் மட்டும் இல்லை. கிளைக் கதையாகவும் துணைகதையாகவும் இடை இடையில் காணப்படும் ஏராளமான வாழ்க்கைத் தத்துவங்களும் நம் மனத்திற்கு வளம் சேர்க்கும் சிந்தனைகளும்தான் அவற்றை மீண்டும் மீண்டும் படிப்பதற்கு நம்மைத் தூண்டுகின்றன.
Sparks - உபநயனம்
தை பிறந்தால் வழிப் பிறக்கும் தங்கமே தங்கம் என்று தள்ளிப்போகும் விவாஹத்தை குறித்து ஆறுதல் சொல்லப்படுவதுண்டு. ஜாதகங்கள் கூடிவந்து திருமணம் செய்யும் சாதகங்கள் வரும்வரை விவாஹ விஷயங்கள் விலகிப் போவதை நம்மால் புரிந்துகொள்ள இயலும். பல்வேறு எதிர்பார்ப்புகளும் பல தரப்பட்ட உடன்பாடுகளும் உள்ளடக்கிய திருமணங்கள் காலதாமதம் ஆவதின் கருப்பொருளை நாம் உணர முடிகிறது.
கர்நாடக சங்கீத வளர்ச்சியில் பிராமணச் சமூகத்தினரின் அரும் பெரும் பணி
கர்நாடக இசையை, பல ஆண்டுகளாக ஒரேரீதியில் ஓரு பரம்பரை வழிபாடாக எவ்வாறு நமது சங்கீத மேதைகள் வளர்த்திருக்கிறார்கள். இந்த மகத்தான வளர்ச்சிக்கு மூல காரணமாக விளங்கிய, விளங்கிவரும் பிராமணச் சமூகத்தினரின் அரிய பெரிய தொண்டினை நோக்குவோமானால் நமது சமூகத்தினரின் ஆற்றல் நன்கு புலப்படுகிறது.
பொங்கலுக்கு ஒரு கரும்புக் கவிதை
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வந்துவிட்டுது. எங்கு பார்த்தாலும் புதுநெல்லும் மஞ்சளும் கரும்பும் மணம் பரப்பி அழகூட்டுகின்றன. இதைப் பார்த்த கவி ஒருவருக்குக் கற்பனை விரிந்து கவிதை பிறந்துவிட்டது. இதோ:
எந்தையும் தாயும் - மைதிலி பிராமணர்கள்
வைதீக பிராமணர்களின் ஒரு முக்கிய பிரிவாக விளங்கும் மைதிலி பிராமணர்கள் பஞ்ச கவுடப் பிராமணர்களின் மிகத் தொன்மையான பிரிவினராக விளங்குகிறார்கள். ஆச்சார அனுஷ்டானங்களை மிகவும் பின்பற்றும் இவர்கள், மிகச்சிறந்த கல்வியாளர்களாகவும் திகழ்ந்தார்கள். மிதிலாபுரி என்று அழைக்கப்பட்ட இவர்களது ராஜ்ஜியம் தற்போதைய வடக்கு மற்றும் தென்கிழக்கு பீஹார் மாநிலம், ஜார்கண்ட் மாநிலத்தில் கோடா, தியோகர் மாவட்டங்கள் மற்றும் நேபாளத்தின் தராய்ப் பகுதிகளை உள்ளடக்கியதாக விளங்கியது.
Reflections
சங்கீத மும்மூர்த்திகளாகச் சாதனை புரிந்த மூவரும் புரந்தரதாஸரும் பொன், பொருள், போகங்களில் பற்றில்லாத பிராமணர்களாகத் திகழ்ந்தது, கர்நாடக சங்கீதத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தது என்னும் கருத்து மிகவும் ஏற்புடையது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment